சென்னை: தமிழர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த சிங்களத் தலைவர்களை மாதா மாதம் சிவப்புக் கம்பளம் விரித்து மத்தியஅரசு வரவேற்று வருவது வேதனை தருகிறது, கடும் கண்டனத்துக்குரிய செயல் இது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈவு இரக்கமின்றி தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அதிபரையும், அந்த நாட்டுத் தலைவர்களையும் மாதா மாதம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது மத்திய அரசு.
இன்று நாடாளுமன்றத்திற்கே இலங்கைத் தலைவர்களை அழைத்து கெளரவித்துள்ளனர். இது அதிர்ச்சி தருகிறது, கடும் கண்டனத்துக்குரிய செயல் இது.
போர்க்குற்றம் புரிந்த ராஜபக்சேவையும், அவரைச் சார்ந்தவர்களையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி அவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தர மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கடுமையாக சாடியுள்ளார்.
PMK founder Dr. Ramadosss has condemned the centre for inviting Lankan Sinhala leaders to the Parliament as guests. He slammed the centre that, Indian govt is welcoming Lankan president and the country's leaders and honouring them. They all committed war crimes. Indian govt should take strong action to punish Rajapakse and other Sinhala leaders for the genocide of Tamils in Eelam war, he urged.