திமுகவினர் மீது பொய் வழக்குகள்-கண்டித்து திருவாரூரில் 6ம் தேதி கருணாநிதி பேசுகிறார்
சென்னை: திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திமுக சார்பில் 6ம் தேதி திருவாரூரில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு கருணாநிதி பேசவுள்ளார்.
சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோரி திமுக சார்பில் மாணவர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் திருவாரூர் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளை திமுகவினர் பஸ்சில் அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது. இந்தப் போராட்டம் முடிந்தவுடன் மாணவர்களை பஸ்சில் ஏற்றி திமுகவினர் அனுப்பி வைத்துள்ளனர்.
அப்போது பஸ் விபத்துக்குள்ளானது. இதில், விஜய் என்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து கொரடாச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து போராட்டத்திற்கு ஏற்பாடு செய்த திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணனைக் கைது செய்தனர். பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலைவாணன் மீது 5 பிரிவுகளில் வழக்குப் போடப்பட்டுள்ளது.
இதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. கலைவாணன் கைதைக் கண்டித்து ஆகஸ்ட் 6ம் தேதி திமுக சார்பில் திருவாரூரில் கண்டனக் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. அதில் கருணாநிதி பேசவுள்ளார்.












Click it and Unblock the Notifications