மேற்கு வங்கத்தில் 2 ரயில்கள் தடம்புரண்டு மோதி விபத்து-ஒருவர் பலி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் ஜமீர்கட்டா என்ற இடத்தில் இரு ரயில்கள் தடம் புரண்டதால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் இரு ரயில்களையும் சேர்ந்த 11 பெட்டிகள் தடம் புரண்டன.
இதுகுறித்து ரயில்வே செய்தித் தொடர்பாளர் அனில் குமார் சக்ஸேனா கூறுகையில் ஒரு மூதாட்டியின் இறந்த உடல் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த உடல் பெங்களூர் குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜினுக்குக் கீழிருந்து மீட்கப்பட்டது.
கோர் மால்டா மற்றும் ஜமீர் கட்டா ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து நடந்தது. பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகளும், என்ஜினும் முதலில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின. இந்த சமயத்தில், மறு முனையில் அஜீம்கஞ்ச் மால்டா பாசஞ்சர் ரயில் வந்து கொண்டிருந்தது. எக்ஸ்பிரஸ் ரயிலின் தடம் புரண்ட பெட்டிகள், பாசஞ்சர் ரயில் மீது மோதியதில் அந்த ரயிலும் தடம் புரண்டது.
விபத்து காரணமாக அப்பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications