நிரூபமா ராவ் ஓய்வு-வெளியுறவு செயலாளரானார் ரஞ்சன் மத்தாய்

Subscribe to Oneindia Tamil

Nirupama Rao and Ranjan Mathai
டெல்லி: நிரூபமா ராவ் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ரஞ்சன் மத்தாய், மத்திய வெளியுறவுத்துறை செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை செயலாளராக இருந்து வந்தவர் நிரூபமா ராவ். இவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. பதவிக்காலத்தின் இறுதி நாட்களை கொழும்பு சென்று ராஜபக்சே வைத்த விருந்துபசாரத்துடன் நிறைவு செய்தார் நிரூபமா ராவ். இது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில் நேற்றுடன் தனது பதவியிலிருந்து விடை பெற்றார் ராவ்.

ராவ் அடுத்து அமெரிக்க தூதராக பணியாற்றவுள்ளார். அமெரிக்க அரசிடமிருந்து இலங்கைக்கு கடும் நெருக்கடிகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில் நிரூபமா ராவ் மூலம் அமெரிக்காவின் அதிரடியிலிருந்து தப்பிப்பது குறித்து ராஜபக்சே பேசியிருக்கலாம் என்று ஈழத் தமிழர்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகிறது.

இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட ரஞ்சன் மத்தாய் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பொறுப்பேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்டை நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் தரப்படும் என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+