பீகாரில் மின்சாரம் தாக்கி 10 பேர் பலி, 50 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் பேருந்து மீது உயர் மின்னழுத்த வயர் விழுந்ததில் அதில் இருந்த 10 பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும், 50 பேர் காயம் அடைந்துள்ளனர்.

பீகாரில் சிவ பக்தர்கள் சிலர் ஜார்கண்ட் மாநிலம் தியோகாரில் உள்ள சிவன் கோவிலுக்கு ஒரு பேருந்தில் புறப்பட்டனர். சிலர் பேருந்தின் மேல் பகுதியில் அமர்ந்து சென்றனர். அந்த பேருந்து நேற்று மாலை ரோடாஸ் மாநிலத்தில் உள்ள அஹ்ரவாரா கிராமத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்தது.

அப்போது பேருந்து மீது அதிக மின் அழுத்தமுள்ள வயர் விழுந்தது. இதில் 10 பேர் உயிர் இழந்தனர், 50 பேர் காயம் அடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் பேருந்தின் மேல் அமர்ந்திருந்தவர்கள்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ரோடாஸ் மாவட்ட எஸ்பி மனு மகராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். இந்த தகவலை எஸ்பி மனு மகாராஜ் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+