ஏர்செல் விவகாரம் தொடர்பாக விரைவில் தயாநிதி மாறனிடம் சிபிஐ விசாரணை
டெல்லி: ஏர்செல் நிறுவன முன்னாள் உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திடம் அதை விற்குமாறு நிர்ப்பந்தம் செய்தது தொடர்பான விவகாரத்தில் விரைவில் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனிடம் சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் லேட்டஸ்டாக சிக்கியவர் தயாநிதி மாறன். சிவசங்கரன் வசம் ஏர்செல் நிறுவனம் இருந்தபோது அந்த நிறுவனம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கோரி விண்ணப்பித்தபோது அதை வழங்காமல் வேண்டும் என்றே காலதாமதம் செய்தார் தயாநிதி மாறன் என்பது ஒரு குற்றச்சாட்டு.
மேலும் சிவசங்கரனை மிரட்டி, ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திடம் விற்குமாறு நிர்ப்பந்தம் செய்தார் என்றும், அவ்வாறு விற்கப்பட்டவுடன் ஏர் செல் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் உரிமங்களை படு வேகமாக வழங்கினார் என்பதும் குற்றச்சாட்டு.
இந்த சர்ச்சை தொடர்பாக சிவசங்கரன் விரிவான வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில் தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ முடிவு செய்தது. இதுகுறித்து பிரதமரிடம் அதுஅனுமதியும் கோரியது. இதையடுத்து பிரதமரின் உத்தரவின் பேரில் தயாநிதி மாறன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் தற்போது தயாநிதி மாறனிடம் சிபிஐ விசாரணை நடத்த தயாராகி விட்டது. விரைவில் அவர் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்ரன.
தயாநிதி மாறனிடம் விசாரணை நடத்திய பின்னர் சிபிஐ, ஸ்பெக்ட்ரம் வழக்கில் தனது 3வது குற்றப்பத்திரிக்கையை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications