மாணவிக்கு ஹெச்.ஐ.வி. கலந்த ரத்தம் வழங்கியதாக ரத்த வங்கி மீது புகார்
மதுரை: பள்ளி மாணவிக்கு ஹெச்.ஐ.வி. கலந்த ரத்தம் வழங்கியதாக, ரத்தம் செலுத்திய டாக்டர் மற்றும் ரத்த வங்கி மீது புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்தவர் பள்ளி மாணவி கௌசல்யா தேவி. இவருக்கு கடந்த 2009ம் ஆண்டு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மதுரை புதூரில் தனியார் மருத்துவமனையில் ஒன்றில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் கண்ணப்பன், மாணவிக்கு ரத்தம் குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு ரத்தம் செலுத்தினார். அதன்பின் மாணவிக்கு அடிக்கடி மயக்கம் ஏற்பட ஆரம்பித்தது.
இதையடுத்து, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் கௌசல்யாவிற்கு ரத்தத்தில் ஹெச்.ஐ.வி. கலந்துள்ளதாக தெரிவித்தனர்.
இதில் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், ரத்தம் வழங்கிய ரத்த வங்கி மீதும், ஹெச்.ஐ.வி. கலந்த ரத்தத்தை செலுத்திய டாக்டர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஷ்ரா கார்க்கிடம் புகார் மனு அளித்தனர்.
இந்த புகார் மீது விசாரணை நடத்த போலீசாருக்கு மதுரை எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். அப்பாவி மனித உயிர்களுடன் விளையாடும் இது போன்ற இரத்த வங்கிகள் மீதும், அலட்சிய டாக்டர்கள் மீதும் மருத்துவ கவுன்சிலும், மத்திய, மாநில அரசும் கடும் நடுவடிக்கை எடுத்து உரிய தண்டனை வங்கினால் மட்டுமே வரும் காலத்தில் இது போன்ற அபாயம் தடுக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications