கோத்தபயாவை பிரதமராக்க ராஜபக்சே திட்டம்?

விடுதலைப் புலிகளுடனான போரை முடிவுக்குக் கொண்டு வந்தவர்களில் முக்கியமானவர் கோத்தபயா. புலிகளை முறியடிப்பதாகக் கூறிக் கொண்டு ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இவரை பிரதமராக்க ராஜபக்சே முயல்வதாகத் தெரிகிறது. விரைவில் செய்யப்படவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது அவரை பிரதமராக்கிவிட ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து இலங்கை அரசில் ஆதிக்கம் செலுத்தும் முக்கியமான பௌத்த பிக்குகளிடம் ராஜபக்சே ஆலோசனை நடத்தியுள்ளார்.
போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை மீது சுமத்தப்படும் சர்வதேச குற்றச்சாட்டுக்களை சமாளிக்க வசதியாக கோத்தபயாவை பிரதமராக்க முயல்வதாகத் தெரிகிறது.
மேலும் கோத்தபயாவுக்கு முக்கிய பொறுப்பு தர வேண்டும் என ராஜபக்சே குடும்பத்திற்குள்ளும் நெருக்குதல் தரப்பட்டு வருவதும் குறிப்பிடதக்கது.
யார் பிரதமராவது என்பதில் பசிலுக்கும் கோத்தபயாவுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. ஆனால், பிரதமர் பதவியை எதிர்பார்த்துள்ள பசில் ராஜபக்சேவை அந்தப் பதவிக்கு நியமித்தால் தான் நாட்டைவிட்டு வெளியேறுவேன் என்று மஹிந்தா ராஜபக்சே தனது குடும்பத்தாரை எச்சரித்துள்ளதாகவும் தெரிகிறது
எல்லாவற்றுக்கும் இந்தியாவிடம் ஓட வேண்டுமா?- கே.பி.:
இந் நிலையில் எல்லா விவகாரங்களுக்கும் இந்தியாவிடம் ஓடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே பி என்ற குமரன் பத்மநாதன் இலங்கை அரசுக்கு யோசனை கூறியுள்ளார்.
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், இரு இனங்களுக்கு இடையிலான பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். எல்லாத் தேவைகளுக்கும் இந்தியாவிடம் செல்லக் கூடாது. இந்திய தலையீடு குறித்து பெரும்பான்மையான இலங்கை மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
10 கோடி சிங்கள மக்கள் மீது 6 கோடி தமிழக மக்களின் நெருக்கடி உள்ளதாக இலங்கை மக்கள் கருதுகின்றனர். இந்த அச்சத்திற்கு நாம் எண்ணெய் ஊற்றக் கூடாது, சிறு விஷயங்களுக்கு எல்லாம் இந்தியாவிடம் ஓடக் கூடாது.
இந்த விஷயத்தை பொறுப்பு வாய்ந்த நபர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தின் வை.கோ, சீமான் போன்றவர்களின் ஆக்ரோசமான உரைகள் மக்களை திசைதிருப்பக் கூடும்.என்று கூறியுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications