மதுரையில் போலீசாரைக் கண்டித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தம்
மதுரை: மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு டாக்டர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளி ஒருவரின் உறவினர் நள்ளிரவில் குடிபோதையில் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரை மருத்தவமனைக்கு உள்ளே அனுமதிக்க டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் மறுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகளின் உறவினர்களுக்கும் டாக்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இத்தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு வந்து இருதரப்பினரிடமும் விசாரித்தனர். அப்போது, சில டாக்டர்களை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.
போலீசாரின் இந்த செயலைக் கண்டித்து, மதுரை ராஜாஜி மருத்துவமனை டாக்டர்கள் பணிகளைப் புறக்கணித்த்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications