தில்ஷன் வழக்கில் 100 பக்க குற்றப்பத்திரிக்கை சமர்ப்பித்தது சிபிசிஐடி.,
சென்னை: சென்னை சிறுவன் தில்ஷன் கொலை வழக்கில், 100 பக்க குற்றப் பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர்.
சென்னை தீவுத்திடல் அருகே கொடிமரச் சாலையில், ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு உள்ளது. கடந்த மாதம் 13ம் தேதி, இங்கு விளையாடிய சிறுவன் தில்ஷன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இந்த வழக்கை விசாரித்த வந்த சிபிசிஐடி போலீசார், ராணுவ லெப்டினென்ட் கர்னல் ராம்ராஜை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்ட ராம்ராஜின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடர்பான ஏறக்குறைய 100 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை, சிபிசிஐடி போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அதில் கொலைக் குற்றத்தை மறைப்பதற்காக, ராம்ராஜ் ரத்தக் கறைப் படிந்த இடத்தை மண் போட்டு மறைத்ததை பார்த்த தில்ஷனின் நண்பனான சிறுவன் அளித்த வாக்குமூலம் சேர்க்கப்பட்டுள்ளது.
மொத்த 70 சாட்சிகளை கொண்ட அறிக்கையில், கூவம் ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கி, சிறுவன் சுடப்பட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்ட குண்டு, பரிசோதனைக்கு பின் கிடைத்த அறிக்கை, ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றப்பத்திரிக்கையின் நகல் ராம்ராஜிற்கு வழங்கப்பட்டு, விசாரணை துவங்கும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications