சிங்கம், புலி, சிறுத்தை, காளைகளை வைத்து விளையாடக் கூடாது-ஜெயராம் ரமேஷ் போட்ட தடை!

இந்தத் தடை உத்தரவில் ஜூலை மாதம் 11ம் தேதி அவர் கையெழுத்திட்டுள்ளார். தற்போதுதான் அது வெளியில் தெரிய வந்துள்ளது. அதுவும் நடிகை ஹேமமாலினி மூலமாக வெளியில் வந்துள்ளது.
சமீபத்தில்தான் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெயராம் ரமேஷ் அப்பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு தமிழகத்தைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன் புதிய சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். புதிய பொறுப்புக்குப் போகும் முன்பு தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்து விட்டுப் போயிருக்கிறார் ரமேஷ்.
ஏற்கனவே முல்லைப் பெரியாறு வழக்கில் தமிழகத்திற்குப் பாதகமாக நடந்து கடுமையாக வாங்கிக் கட்டிக் கொண்டவர் ஜெயராம் ரமேஷ் என்பதால்,ஜல்லிக்கட்டு தொடர்பாக அவர் பிறப்பித்துள்ள தடை உத்தரவு தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 11ம் தேதி ஜெயராம் ரமேஷ் பிறப்பித்த ஒரு அறிவிக்கையில், புலிகள், சிங்கங்கள், கரடிகள், சிறுத்தைகள், குரங்கள் உள்ளிட்டவற்றை பொது இடங்களில் எந்தவிதமான முறையிலும் பயன்படுத்தத் தடை உள்ளது. தற்போது இந்த விலங்குகள் வரிசையில், காளைகளும் சேர்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயராம் ரமேஷ் கடைசியாக கையெழுத்துப் போட்ட இந்த உத்தரவுக்கு நடிகை ஹேமமாலினி பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளார்.
யானைகளையும் தடை செய்வார்களா?
இதற்கிடையே கேரளாவில் மிகவும் அபாயகரமான சூழலில் யானைகளை வைத்து ஓட்டப்பந்தயம் உள்ளிட்டவை நடத்தப்படுவதுண்டு. அதுபோன்ற அபாயகரமான விளையாட்டுக்களையும் மத்திய சுற்றுச்சூழல் துறை தடை செய்யுமா என்று சில விலங்குகள் நல ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
காளைகளை விட யானைகள் மிகவும் அபாயகரமானவை. குறிப்பாக அவற்றை ஓட்டப் போட்டியில் ஈடுபடுத்தும்போது திடீரென மதம் பிடித்தால் பெரும் உயிரிழப்புகளுக்கும், நாசங்களுக்கும் வாய்ப்புள்ளது. எனவே இதுபோன்ற விளையாட்டுக்களுக்கும் தடை செய்ய வேண்டும் அவர்கள் வாதிடுகிறார்கள்.
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், உச்சநீதிமன்றம் இதுவரை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை முழுமையாக தடை செய்யாத நிலையில், நிபந்தனைகளுடன் நடத்த அனுமதித்து வரும் நிலையில் ஜெயராம் ரமேஷ் தன்னிச்சையாக இப்படி ஒரு தடையை விதித்து விட்டுப் போயிருப்பது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விரும்பிகளை, ஆதரவாளர்களை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications