சிங்கம், புலி, சிறுத்தை, காளைகளை வைத்து விளையாடக் கூடாது-ஜெயராம் ரமேஷ் போட்ட தடை!

இந்தத் தடை உத்தரவில் ஜூலை மாதம் 11ம் தேதி அவர் கையெழுத்திட்டுள்ளார். தற்போதுதான் அது வெளியில் தெரிய வந்துள்ளது. அதுவும் நடிகை ஹேமமாலினி மூலமாக வெளியில் வந்துள்ளது.
சமீபத்தில்தான் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெயராம் ரமேஷ் அப்பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு தமிழகத்தைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன் புதிய சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். புதிய பொறுப்புக்குப் போகும் முன்பு தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்து விட்டுப் போயிருக்கிறார் ரமேஷ்.
ஏற்கனவே முல்லைப் பெரியாறு வழக்கில் தமிழகத்திற்குப் பாதகமாக நடந்து கடுமையாக வாங்கிக் கட்டிக் கொண்டவர் ஜெயராம் ரமேஷ் என்பதால்,ஜல்லிக்கட்டு தொடர்பாக அவர் பிறப்பித்துள்ள தடை உத்தரவு தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 11ம் தேதி ஜெயராம் ரமேஷ் பிறப்பித்த ஒரு அறிவிக்கையில், புலிகள், சிங்கங்கள், கரடிகள், சிறுத்தைகள், குரங்கள் உள்ளிட்டவற்றை பொது இடங்களில் எந்தவிதமான முறையிலும் பயன்படுத்தத் தடை உள்ளது. தற்போது இந்த விலங்குகள் வரிசையில், காளைகளும் சேர்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயராம் ரமேஷ் கடைசியாக கையெழுத்துப் போட்ட இந்த உத்தரவுக்கு நடிகை ஹேமமாலினி பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளார்.
யானைகளையும் தடை செய்வார்களா?
இதற்கிடையே கேரளாவில் மிகவும் அபாயகரமான சூழலில் யானைகளை வைத்து ஓட்டப்பந்தயம் உள்ளிட்டவை நடத்தப்படுவதுண்டு. அதுபோன்ற அபாயகரமான விளையாட்டுக்களையும் மத்திய சுற்றுச்சூழல் துறை தடை செய்யுமா என்று சில விலங்குகள் நல ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
காளைகளை விட யானைகள் மிகவும் அபாயகரமானவை. குறிப்பாக அவற்றை ஓட்டப் போட்டியில் ஈடுபடுத்தும்போது திடீரென மதம் பிடித்தால் பெரும் உயிரிழப்புகளுக்கும், நாசங்களுக்கும் வாய்ப்புள்ளது. எனவே இதுபோன்ற விளையாட்டுக்களுக்கும் தடை செய்ய வேண்டும் அவர்கள் வாதிடுகிறார்கள்.
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், உச்சநீதிமன்றம் இதுவரை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை முழுமையாக தடை செய்யாத நிலையில், நிபந்தனைகளுடன் நடத்த அனுமதித்து வரும் நிலையில் ஜெயராம் ரமேஷ் தன்னிச்சையாக இப்படி ஒரு தடையை விதித்து விட்டுப் போயிருப்பது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விரும்பிகளை, ஆதரவாளர்களை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications