டெல்லி செல்ல ஏழை மாணவனுக்கு ரூ 10,000 கொடுத்து உதவிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. காமராஜ்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராபுரம் தொகுதி, மணவாடி பெரிய காலனியை சேர்ந்த சிவக்குமார் - விஜயா தம்பதிகளின் மகன் அஜித்குமார் (14). இவர் மணவாடி அரசு நடுநிலைப்பள்ளி 8 ம் வகுப்பு படித்து வருகின்றார்.
கரூர் வெண்ணெய்மலையில் உள்ள கொங்கு பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான "இன்ஸ்பியர்' விருதுக்கான அறிவியல் கண்காட்சியில் மாணவர் அஜித்குமார் பங்கேற்றார்.
அதில், தண்ணீர் மூலம் இயங்கும் பொக்லைன் இயந்திரத்தை காட்சிக்கு வைத்திருந்தார். இவரின் படைப்பு சிறந்த கண்டுபிடிப்பாக தேர்வு செய்யப்பட்டது.
சென்னையில் நடந்த அறிவியல் மாநாட்டில், கரூர் மாவட்டம் சார்பாக பங்கேற்ற குழுவில் அஜித்குமார் பங்கேற்றார். அங்கும் அவரது படைப்பு சிறந்த படைப்பாக கருதப்பட்டது.
இதனையடுத்து, அகில இந்திய அளவில் டெல்லியில் ஆகஸ்ட் 14,15,16 ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த அறிவியல் மாநாட்டில் தமிழ்நாடு சார்பாக பங்கேற்க அஜித்குமார் தேர்வு செய்யப்பட்டார்.
போட்டியில் பங்கேற்க விரும்பிய அஜித்குமாருக்கு நிதி வசதி இல்லாததால், டெல்லிக்கு சென்று போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனை அறிந்த கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. காமராஜ், தனது சொந்த பணம் 10 ஆயிரம் ரூபாயை அஜித்குமாருக்கு வழங்கினார்.
காலத்தினால் எம்.எல்.ஏ. காமராஜ் செய்த உதவி பொது மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.
இவர் ஏற்கனவே, தனது இரண்டு மாத சம்பளம் ரூ ஒரு லட்சத்தை ஏழை எளிய குழந்தைகளுக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications