தங்கபாலு ஒரு டம்மி பீஸ்: முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

கோபியில் ரூ. 10 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ராகுல்காந்தி விளையாட்டு மற்றும் கலாச்சார மையத்தை முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தேவையில்லாமல் என்னைப் பற்றி விமர்சித்து வருகிறார். அவர் தனது விமர்சனத்தை உடனே நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் காங்கிரஸாரே அவர் மீது நில அபகரிப்பு புகார் கொடுப்பார்கள்.
உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்தெல்லாம் பேச தங்கபாலுவுக்கு எந்த உரிமையும் இல்லை. அதை காங்கிரஸ் மேலிடமும், ராகுல் காந்தியும் தான் முடிவு செய்ய வேண்டும். காங்கிரஸில் இருந்து யாரையும் நீக்கவோ, புதிதாக சேர்க்கவோ பதவி விலகிய தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை.
உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் தான் கூட்டணி என்று அவர் கூறி வருகிறார். ஆனால் காங்கிரஸாரோ தனித்து போட்டியிட விரும்புகின்றனர். ராகுல்காந்தி தமிழக காங்கிரஸுக்கு புதிய தலைவரை விரைவில் நியமிப்பார் என்றார்.












Click it and Unblock the Notifications