சென்னை: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்களைத் தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ஜெயலலிதாவின் அறையில் இன்று நடந்தது. இதில் எதிர்க்கட்சித் தலைவரான தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார்.
மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்களை முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் சேர்ந்து தேர்வு செய்ய வேண்டும் என்பது மரபாகும். எனவே இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று முதல்வர் ஜெயலலிதாவின் அறையில் நடந்தது. அதில் எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த்தும் கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் சட்டசபை சபாநாயகர் ஜெயக்குமாரும் பங்கேற்றார்.
CM Jayalalitha and Opposition leader Vijayakanth met today in CM's chamber to decide the members of State human rights commission. Speaker Jayakumar also attended the meeting.