நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்த பாஜக முயற்சி-பதட்டம்
டெல்லி காங்கிரஸ் அரசின் ஊழல் புகார்களைக் கண்டித்து பாஜக இளைஞர் அணியினர் இன்று நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றதால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து நாடாளுமன்றத்தின் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டன.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், கல்மாடி விவகாரம், காமன்வெல்த் ஊழல் உள்ளிட்டவற்றைக் கண்டித்தும், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் ராஜினாமா செய்ய வேண்டும், பிரதமர் மன்மோகன்சிங் விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக இளைஞர் அணியினர் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தில் குதித்தனர்.
நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக அவர்கள் வந்ததால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இருப்பினும் அவர்களை நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து விடாமல் போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸாரை மீறி உள்ளே நுழைய பாஜகவினர் முயன்றதால் போலீஸார் லேசான தடியடி நடத்திக் கலைத்தனர்.
இருப்பினும் தொடர்ந்து பாஜகவினர் கலையாமல் அங்கும் இங்கும் ஓடியபடி இருந்ததால் நாடாளுமன்றத்தின் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டன. போலீஸாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications