உள்ளாட்சி தேர்தலுக்கு பின்பு கூட்டுறவு தேர்தல்: அமைச்சர் செல்லூர் ராஜூ
விருதுநகர்: உள்ளாட்சி தேர்தலுக்கு பின்பு கூட்டுறவு தேர்தல் நடத்தப்படும் என, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்த கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ரேசன் கடையில் பொதுமக்களுக்கு தரமான அரிசிகளை மட்டுமே வழங்க வேண்டும். தரமில்லாத அரிசிகளை வழங்க கூடாது. பொதுமக்கள் வசதிக்காக தேவையான பகுதிகளில் பகுதிநேர ரேஷன் கடைகள் துவக்கப்படும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும். தொடக்க கூட்டுறவு சங்கங்களில் கடன் தள்ளுபடி செய்த வகையில், கூட்டுறவுத் துறைக்கு 500 கோடி ரூபாய் வர வேண்டியது உள்ளது.
இந்த தொகை வந்தவுடன் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் வலுப்படுத்தப்படும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. அதன்பின்பு முதல்வர் ஜெயலலிதா ஆலோசனைப்படி, கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும், என்றார்.












Click it and Unblock the Notifications