காமன்வெல்த் போட்டி ஊழலுக்காக ஆட்சியாளர்களின் தலைகள் உருளட்டும்- அருண் ஜேட்லி ஆவேசப் பேச்சு

காமன்வெல்த் போட்டி ஊழல் விவகாரத்தில் சுரேஷ் கல்மாடி மற்றும் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் குறித்து இன்றும் நாடாளுமன்றத்தில் புயல் கிளம்பியது.
இரு அவைகளும் காலையில் கூடியதும் பாஜகவினர் போராட்டத்தில் குதித்ததால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
பிற்பகல் 2 மணி வரை லோக்சபா ஒத்திவைக்கப்பட்டு தற்போது மீண்டும் கூடி விவாதம் நடந்து வருகிறது.
முன்னதாக 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட ராஜ்யசபா 12 மணிக்குக் கூடியபோது ஊழல் புகார்கள் குறித்த விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்டு அருண் ஜேட்லி பேசியபோது, சுரேஷ் கல்மாடியை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போதுதான் காமன்வெல்த் போட்டிக் குழுத் தலைவராக நியமித்தனர் என்று பச்சைப் பொய்யை பேசியுள்ளார் விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மேக்கான். இது கடும் கண்டனத்துக்குரியது.
இது மிகவும் கேலிக்கூத்தாக உள்ளது. கல்மாடி நியமனம் தொடர்பாக தன் மீதான களங்கத்தை தள்ளி விடப் பார்க்கிறது காங்கிரஸ். காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பான அனைத்தையும் மறைக்கப் பார்க்கிறது காங்கிரஸ்.
காமன்வெல்த் போட்டி ஊழல் மிகப் பெரிய அளவில் நடந்துள்ளது. இதில் பலருக்கும் தொடர்பு உள்ளது. அவர்களை எல்லாம் காப்பாற்றப் பார்க்கிறது காங்கிரஸ். இந்த ஊழலுக்காக யாருடைய தலையாவது உருள வேண்டுமானால் அது ஆட்சியாளர்களின் தலைகளாகத்தான் இருக்கும்.
நாடாளுமன்றத்தில் பொய்யான தகவலைக் கூறி திசை திருப்பப் பார்க்கிறார் மேக்கான். பிரதமர் அலுவலகம்தான் கல்மாடியை நியமித்தது. பிரதமருக்கு இது தெரிந்தே நடந்துள்ளது. இதற்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும். ஆனால் அவர் அமைதி காக்கிறார். ஏன் இந்த அமைதி என்பதை அவர்தான் விளக்க வேண்டும். டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தும் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications