காமன்வெல்த் போட்டி ஊழலுக்காக ஆட்சியாளர்களின் தலைகள் உருளட்டும்- அருண் ஜேட்லி ஆவேசப் பேச்சு

காமன்வெல்த் போட்டி ஊழல் விவகாரத்தில் சுரேஷ் கல்மாடி மற்றும் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் குறித்து இன்றும் நாடாளுமன்றத்தில் புயல் கிளம்பியது.
இரு அவைகளும் காலையில் கூடியதும் பாஜகவினர் போராட்டத்தில் குதித்ததால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
பிற்பகல் 2 மணி வரை லோக்சபா ஒத்திவைக்கப்பட்டு தற்போது மீண்டும் கூடி விவாதம் நடந்து வருகிறது.
முன்னதாக 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட ராஜ்யசபா 12 மணிக்குக் கூடியபோது ஊழல் புகார்கள் குறித்த விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்டு அருண் ஜேட்லி பேசியபோது, சுரேஷ் கல்மாடியை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போதுதான் காமன்வெல்த் போட்டிக் குழுத் தலைவராக நியமித்தனர் என்று பச்சைப் பொய்யை பேசியுள்ளார் விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மேக்கான். இது கடும் கண்டனத்துக்குரியது.
இது மிகவும் கேலிக்கூத்தாக உள்ளது. கல்மாடி நியமனம் தொடர்பாக தன் மீதான களங்கத்தை தள்ளி விடப் பார்க்கிறது காங்கிரஸ். காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பான அனைத்தையும் மறைக்கப் பார்க்கிறது காங்கிரஸ்.
காமன்வெல்த் போட்டி ஊழல் மிகப் பெரிய அளவில் நடந்துள்ளது. இதில் பலருக்கும் தொடர்பு உள்ளது. அவர்களை எல்லாம் காப்பாற்றப் பார்க்கிறது காங்கிரஸ். இந்த ஊழலுக்காக யாருடைய தலையாவது உருள வேண்டுமானால் அது ஆட்சியாளர்களின் தலைகளாகத்தான் இருக்கும்.
நாடாளுமன்றத்தில் பொய்யான தகவலைக் கூறி திசை திருப்பப் பார்க்கிறார் மேக்கான். பிரதமர் அலுவலகம்தான் கல்மாடியை நியமித்தது. பிரதமருக்கு இது தெரிந்தே நடந்துள்ளது. இதற்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும். ஆனால் அவர் அமைதி காக்கிறார். ஏன் இந்த அமைதி என்பதை அவர்தான் விளக்க வேண்டும். டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தும் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications