நில மோசடி: மதிமுக நிர்வாகி புகாரின்பேரில் திருச்சியில் திமுக செயலாளர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: நில மோசடி விவகாரத்தில் பொன்மலை திமுக செயலாளர் தர்மராஜ் இன்று கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் நில அபகரிப்பு, நில மோசடி போன்ற வழக்குகளில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கைதாகி வருகின்றனர். நில மோசடி, நில அபகரிப்பு புகார்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு என்று காவல் நிலையங்களில் தனிப் பிரிவு செயல்பட்டு வருகிறது. அந்த பிரிவின் துரித நடவடிக்கைகளால் ஏராளமானோர் கைதாகியுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகள். இந்த பட்டியலில் சேர்ந்துள்ளார் பொன்மலை பகுதி திமுக செயலாளர் தர்மராஜ்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலை பகுதி திமுக செயலாளர் தர்மராஜ். அதே பகுதியைச் சேர்ந்த மதிமுக நிர்வாகி கண்ணையன் என்பவர் தர்மராஜ் மீது நில மோசடி புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் தர்மராஜை திருச்சியில் வைத்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications