சீனாவின் முதல் விமானம் தாங்கிக் கப்பல் தயார்!

அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட மிகச் சில நாடுகளிடம் தான் விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. இந்தியா உள்ளிட்ட நாடுகள் அந்த நாடுகளிடம் தான் விமானம் தாங்கிக் கப்பல்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றன.
உலகில் மொத்தமே 9 நாடுகள் தான் இந்த வகை கப்பல்களைக் கொண்டுள்ளன. இதில் அமெரிக்காவிடம் 11 கப்பல்கள் உள்ளன. மற்ற எல்லா நாடுகளையும் சேர்த்தாலே உலகிலேயே மொத்தம் 21 விமானம் தாங்கிக் கப்பல்கள் தான் இப்போது சர்வீசில் உள்ளன.
இதில் இந்தியாவிடம் உள்ள ஐஎன்எஸ் விராட் கப்பல் இங்கிலாந்திடம் வாங்கப்பட்டது. 1953ம் ஆண்டு இதை பிரிட்டன் கட்டியது. 1986ம் ஆண்டு இதை இந்தியா வாங்கியது. இந்தக் கப்பல் 2019ம் ஆண்டில் டி-கமிஷன் செய்யப்பட்டு, கடற்படையிலிருந்து விலக்கப்பட்டுவிடும்.
இதற்கு முன் இந்தியாவிடம் இருந்த இன்னொரு விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் வி்க்ராந்த், 20 வருட சேவைக்குப் பின் 1997ம் ஆண்டில் கடற்படையிலிருந்து விலக்கப்பட்டது. இதுவும் இங்கிலாந்திடம் இருந்து வாங்கப்பட்ட செகண்ட் ஹேண்ட் கப்பல் தான்.
இந் நிலையில் ரஷ்யாவிடம் இருந்து அட்மிரல் கோர்ஸ்காவ் என்ற விமானம் தாங்கிக் கப்பலை வாங்கியுள்ளது இந்தியா. இதுவும் சோவியத் யூனியனால் பயன்படுத்தப்பட்ட பழைய கப்பலே. இதை நவீனமாக்கும் வேலைகளை இந்தியாவுக்காக ரஷ்யா செய்து வருகிறது. இது இந்தியாவிடம் வந்து சேர மேலும் பல ஆண்டுகள் ஆகலாம்.
இந் நிலையில் இதுவரை விமானம் தாங்கிக் கப்பலே இல்லாமல் இருந்த சீனா முதல் முறையாக அந்தக் கப்பலை கடற்படையில் இப்போது சேர்த்துள்ளது.
சோவியத் யூனியனால் இந்தக் கப்பல் கட்டப்பட்டு வந்தது. ஆனால், 1991ம் ஆண்டில் சோவியத் யூனியன் என்ற நாடே சிதைந்து போன நிலையில், இந்தக் கப்பல் உக்ரைன் நாட்டின் கட்டுப்பாட்டில் வந்தது. இந்தக் கப்பலை கட்ட போதிய நிதி வசதியில்லாமல் உக்ரைன் தவிக்க, 10 ஆண்டுகளுக்கு முன் இதை சீனா வாங்கியது.
சீனாவிடம் இதைத் தரும் முன் அதிலிருந்த என்ஜின்கள் மற்றும் ஆயுதங்களை உக்ரனை அகற்றிவிட்டது.
ஆனாலும் அதை வாங்கிய சீனா, கப்பலுக்கு என்ஜினையும் உருவாக்கியதோடு, இதற்கான ஏவுகணைகள் உள்ளிட்ட அனைத்து ஆயுதங்களையும் தானே தயாரித்துப் பொறுத்தி இன்று கப்பலை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துவிட்டது. சீனாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள டாலியன் போர்ட் துறைமுகத்திலிருந்து இந்தக் கப்பல் இன்று கடலுக்குள் செலுத்தப்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications