நில அபகரிப்பு: ஒரே நாளில் 10 பேர் சரண், 3 பேர் ஜாமீன் மனு தாக்கல், 3 பேர் கைது
சேலம்: நில அபகரிப்பு வழக்குகளில் ஒரே நாளில் 10 பேர் சரண் அடைந்துள்ளனர். 3 முக்கிய கட்சி நிர்வாகிகள் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நில அபகரிப்பு, நில மோசடி தொடர்பான வழக்குகள் குறித்து போலீசார் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நில அபகரிப்பு வழக்குகளில் தொடர்புடைய 10 பேர் நேற்று நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். 3 முக்கிய நிர்வாகிகள் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு, பிரீமியர் மில் நில அபகரிப்பு வழக்குகளில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த வழக்குகளில் தொடர்புடைய மேலும் சிலர் தலைமறைவாக இருந்து வந்தனர்.
அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்கில் தொடர்புடைய அதிமுக நிர்வாகி சித்தானந்தன், காங்கிரஸ் நிர்வாகி உலக நம்பி ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். இந்நிலையில் அவர்களை சரண் அடையுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் நேற்று சேலம் 5-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி ஜி. சரத்ராஜ் முன்பு சரண் அடைந்தனர். இருவருக்கும் தலா ரூ. 10 ஆயிரம் வீதம் இரு நபர் ஜாமீன் வழங்கப்பட்டது. அவர்கள் தினமும் காலை குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதே போன்று பிரீமியர் மில்ஸ் நில அபகரிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த ஏ.ஆர். ஆர். சீனிவாசன், அவரது மனைவி ராஜேஸ்வரி, மகன்கள் ரவிச்சந்திரன், ராமநாதன், மகள்கள் சுமித்ரா தேவி, கீதா, அசோக் துரைசாமி, திமுக நிர்வாகி அழகாபுரம் முரளி ஆகிய 8 பேரும் நேற்று சேலம் 5-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி ஜி. சரத்ராஜ் முன்பு சரண் அடைந்தனர். அவர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் இரு நபர் ஜாமீன் வழங்கப்பட்டது. அவர்களும் தினமும் காலை குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஓமலூர் கோட்டமேட்டுப்பட்டியைச் சேர்ந்த பொறியாளர் வரதராஜன் பாமக முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்தி மீது நில மோசடி புகார் கொடுத்தார். இதையடுத்து கார்த்தி தலைமறைவாகியுள்ளார். அவர் முன் ஜாமீன் கேட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை(11-ம் தேதி) விசாரணைக்கு வருகிறது.
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைதாகியுள்ள தாசநாயக்கன்பட்டி நில அபகரிப்பு வழக்கில் தொடர்புடைய அவரது உதவியாளர் கௌசிக பூபதி, தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ் குமார் ஆகியேர் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். கௌசிக பூபதி மனு நாளையும், சுரேஷ்குமாரின் மனு நாளை மறுநாளும் விசாரணைக்கு வருகிறது.
மதிமுக நிர்வாகி கண்ணையன் கொடுத்த நில அபகரி்ப்பு புகாரின்பேரில் திருச்சி பொன்மலைப் பகுதி திமுக செயலாளர் தர்மராஜ் நேற்று கைது செய்யப்பட்டார். இதேபோன்று திண்டுக்கல் மாவட்டம் மேற்கு ஆயக்குடியில் உள்ள அரசு நிலத்தை அபகரித்த திமுக நிர்வாகியும்,சிவகிரிப்பட்டி ஊராட்சித் தலைவருமான மாரியப்பன், அவரது மனைவி முருகேஸ்வரி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications