Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நில அபகரிப்பு: ஒரே நாளில் 10 பேர் சரண், 3 பேர் ஜாமீன் மனு தாக்கல், 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சேலம்: நில அபகரிப்பு வழக்குகளில் ஒரே நாளில் 10 பேர் சரண் அடைந்துள்ளனர். 3 முக்கிய கட்சி நிர்வாகிகள் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நில அபகரிப்பு, நில மோசடி தொடர்பான வழக்குகள் குறித்து போலீசார் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நில அபகரிப்பு வழக்குகளில் தொடர்புடைய 10 பேர் நேற்று நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். 3 முக்கிய நிர்வாகிகள் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு, பிரீமியர் மில் நில அபகரிப்பு வழக்குகளில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த வழக்குகளில் தொடர்புடைய மேலும் சிலர் தலைமறைவாக இருந்து வந்தனர்.

அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்கில் தொடர்புடைய அதிமுக நிர்வாகி சித்தானந்தன், காங்கிரஸ் நிர்வாகி உலக நம்பி ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். இந்நிலையில் அவர்களை சரண் அடையுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் நேற்று சேலம் 5-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி ஜி. சரத்ராஜ் முன்பு சரண் அடைந்தனர். இருவருக்கும் தலா ரூ. 10 ஆயிரம் வீதம் இரு நபர் ஜாமீன் வழங்கப்பட்டது. அவர்கள் தினமும் காலை குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதே போன்று பிரீமியர் மில்ஸ் நில அபகரிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த ஏ.ஆர். ஆர். சீனிவாசன், அவரது மனைவி ராஜேஸ்வரி, மகன்கள் ரவிச்சந்திரன், ராமநாதன், மகள்கள் சுமித்ரா தேவி, கீதா, அசோக் துரைசாமி, திமுக நிர்வாகி அழகாபுரம் முரளி ஆகிய 8 பேரும் நேற்று சேலம் 5-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி ஜி. சரத்ராஜ் முன்பு சரண் அடைந்தனர். அவர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் இரு நபர் ஜாமீன் வழங்கப்பட்டது. அவர்களும் தினமும் காலை குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஓமலூர் கோட்டமேட்டுப்பட்டியைச் சேர்ந்த பொறியாளர் வரதராஜன் பாமக முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்தி மீது நில மோசடி புகார் கொடுத்தார். இதையடுத்து கார்த்தி தலைமறைவாகியுள்ளார். அவர் முன் ஜாமீன் கேட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை(11-ம் தேதி) விசாரணைக்கு வருகிறது.

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைதாகியுள்ள தாசநாயக்கன்பட்டி நில அபகரிப்பு வழக்கில் தொடர்புடைய அவரது உதவியாளர் கௌசிக பூபதி, தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ் குமார் ஆகியேர் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். கௌசிக பூபதி மனு நாளையும், சுரேஷ்குமாரின் மனு நாளை மறுநாளும் விசாரணைக்கு வருகிறது.

மதிமுக நிர்வாகி கண்ணையன் கொடுத்த நில அபகரி்ப்பு புகாரின்பேரில் திருச்சி பொன்மலைப் பகுதி திமுக செயலாளர் தர்மராஜ் நேற்று கைது செய்யப்பட்டார். இதேபோன்று திண்டுக்கல் மாவட்டம் மேற்கு ஆயக்குடியில் உள்ள அரசு நிலத்தை அபகரித்த திமுக நிர்வாகியும்,சிவகிரிப்பட்டி ஊராட்சித் தலைவருமான மாரியப்பன், அவரது மனைவி முருகேஸ்வரி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+