செவ்வாய் கிரகத்தில் பனிக் கட்டிகள்!

கடந்த 2006ம் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் ஒன்றை நாசா விண்வெளி நிலையம் அனுப்பியது. தற்போது வெயில் காலம் நிலவும் இடங்களில் ஆராய்ச்சி செய்து வரும் விண்கலம் அனுப்பும் பாடங்களை, விஞ்ஞானிகள் அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகின்றனர்.
சமீபத்தில் சில படங்களை வெளியிட்ட விஞ்ஞானிகள் கூறுகையில், செவ்வாய் கிரகம் அதிக உப்புத் தன்மைக் கொண்டது. இதனால், அதன் மீதோ அல்லது உட்புறத்திலோ செல்லும் தண்ணீரும் உவர்ப்பு சுவைக் கொண்டதாகவே இருக்கும். உப்பு தண்ணீரை, குளூமைப்படுத்தி, அடக்கி வைக்கும் தன்மைக் கொண்டது.
செவ்வாய் கிரகத்தில், இருண்ட சில நீண்ட ஒழுங்கற்ற கோடுகள் போன்ற உருவங்கள் எடுக்கப்பட்ட படங்களில் பதிவாகி உள்ளது. இவை தண்ணீரைக் கொண்ட கட்டிகளாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. இவை சில பூமி மாதங்களில் பல மடங்காக வளர்ந்து விடுகிறது.
ஆனால், இந்த உருவம் செவ்வாய் கிரகத்தை சேர்ந்தது தானா அல்லது விண்வெளியில் இருந்து விழுந்ததா என்பதை சில ஆராய்ச்சிகளுக்கு பிறகே உறுதிச் செய்ய முடியும். அதில் சில கட்டிகள் 200 மீ்ட்டருக்கும் அதிகமான வளர்ச்சியைக் கொண்டுள்ளது. தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறோம்.












Click it and Unblock the Notifications