Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் இசக்கிமுத்து மீது பண மோசடி புகார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் இசக்கிமுத்து மீது தல்லாகுளம் காவல் நிலையத்தில் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் இசக்கிமுத்து. இவரது தங்கை தங்கம். இவர் வங்கி கடன் பெற்று இண்டிகா கார் ஒன்று வாங்கியுள்ளார். புதூரை சேர்ந்த (108 இலவச ஆம்புலன்ஸ்) டிரைவர் சரவணக்குமார் என்பவரிடம் 1,65,000 ரூபாய் என விலை பேசி, 60 ஆயிரம் ரூபாயை இசக்கிமுத்துவிடம் கொடுத்தார்.

பாக்கியுள்ள 1,05,000 ரூபாயை வங்கியில் செலுத்துமாறு இசக்கிமுத்து கூறியுள்ளார். ஆனால், வங்கியில் விசாரித்த போது, காருக்கு 1,45,000 ரூபாய் பாக்கி உள்ளதாக வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது குறித்து இசக்கிமுத்துவிடம் சரவணக்குமாரின் நண்பர் இருளாண்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் இசக்கிமுத்து, அவரது மகன் குட்டிமணி, உதவியாளர்கள் ரவி, வேல்முருகன் ஆகியோர் சேர்ந்து சரவணக்குமாரை தாக்க முயன்றனர்.

இது குறித்து சரவணகுமார் அளித்த புகாரின் பேரில், தல்லாகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+