பாஜகவினர் மீது போலீஸ் தடியடி- எம்.பிக்கள் பெரும் அமளி-நாடாளுமன்றம் முடங்கியது
Subscribe to Oneindia Tamil

இன்று காலை லோக்சபா கூடியதும், காமன்வெல்த் போட்டி ஊழல் விவகாரத்தை மீண்டும் பாஜக உறுப்பினர்கள் எழுப்பினர். டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
மேலும், நேற்று நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய பாஜகவினர் மீது போலீஸார் தடியடி நடத்தி விரட்டியது குறித்து கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். இதனால் பெரும் அமளி நிலவியது. இதையடுத்து முதலில் பிற்பகல் 12 மணி வரையிலும் பின்னர் 2 மணி வரைக்கும் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.
இதே பிரச்சினை ராஜ்யசபாவிலும் எழுந்தது. அங்கு தொடர்ந்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications