நெல்லை ஜங்ஷனில் குண்டுவெடிப்பு: விரல்களை இழந்த வாலிபர்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: திருநெல்வேலி ரயில்வே ஜங்ஷனில் குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் தனது இடதுகை விரல்களை இழந்தார்.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள திருநெல்வேலி ரயில்வே ஜங்ஷனிற்கு முத்துசாமி(19) என்னும் வாலிபர் ஒரு பையுடன் வந்தார். அவர் வந்த சில நிமிடங்களில் ஜங்ஷனில் குண்டு வெடித்தது. அவர் பையில் தான் குண்டு இருந்திருக்க வேண்டும் என்று போலீசார் நம்புகின்றனர்.
இந்த குண்டுவெடிப்பில் முத்துசாமியின் இடது கை விரல்கள் துண்டானது. அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் மீது ஏற்கனவே கிரிமினல் வழக்குகள் உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
முத்துசாமி மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதால் அவருக்கு எதிரிகள் இருக்கலாம் என்று போலீஸ் கமிஷனர் வரதராஜன் கூறினார்.












Click it and Unblock the Notifications