10ம் வகுப்பு புத்தகத்தில் திமுக அரசின் சாதனைகள்-கருப்பு மை போட்டு அழிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
சென்னை: மாணவ, மாணவியர் 16ம் தேதி முதல் சமச்சீர் கல்விப் பாடப் புத்தகத்துடன்தான் பள்ளிக்கு வர வேண்டும். அன்று முதல் சமச்சீர் கல்வி பாடம் நடத்தப்படும் என்று மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் சமச்சீர் கல்விப் புத்தகங்களில் 41 இடங்களில் கருப்பு மை போட்டும், ஸ்டிக்கர் ஒட்டியும் மறைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு புத்தகத்தில் திமுக அரசின் சாதனைகள் என்ற பகுதி இடம் பெற்றிருக்கிறது. அதையும் அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன் உத்தரவுப்படி தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதையடுத்து மாணவ, மாணவியருக்கு புத்தகங்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மின்னல் வேகத்தில் புத்தகங்களை விநியோகிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
நேற்று முன்தினம் இப்பணி தொடங்கியது. தொடர்ந்து பள்ளிகளுக்கு புத்தகங்கள் வேகமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுடன் சேர்ந்து அரசு கிட்டங்கிகளுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வேன்கள், மினி லாரிகள் மூலம் பெற்றுச் சென்றனர்.
புத்தகங்களில் சில நீக்கங்களை அரசு அறிவித்துள்ளது. அவற்றை 14ம் தேதிக்குள் செய்ய வேண்டும். அதன் பின்னர் 15ம் தேதிக்குள் புத்தகங்களை மாணவர்களிடம் வழங்க வேண்டும். 16ம் தேதி முதல் இந்த புத்தகங்களை வைத்துப் பாடம் நடத்த வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
கருணாநிதி கவிதை-சென்னை சங்கத்திற்கு கருப்பு ஸ்டிக்கர்
சமச்சீர் பாடத் திட்ட புத்தகங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதைகள், கனிமொழி நடத்திய சென்னை சங்கமம், புதிய தலைமைச் செயலகம், செம்மொழி தமிழ் மாநாடு உள்ளிட்டவை குறித்து பாடத்துடன் சேர்த்து வைத்துள்ளனர். இவற்றையெல்லாம் நீக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இவற்றை நீக்கிய பின்னரே மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மொத்தம் 41 இடங்களில் கருப்பு ஸ்டிக்கர்களை ஒட்டியும், கருப்பு மை தடவியும் அவற்றை மறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
2-வது வகுப்பு தமிழ் பாடபுத்தகம் 5-ம் பக்கத்தில் உள்ள கருணாநிதி எழுதிய செம்மொழி வாழ்த்து, 73-ம் பக்கத்தில் உள்ள செம்மொழி மாநாட்டு காட்சிகள் தமிழாய்வு மத்திய நிறுவனம் பகுதி ஆகியவற்றை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அது போன்று அனைத்து வகுப்புகளிலும் உள்ள செம்மொழி வாழ்த்து பகுதி நீக்கப்படுகிறது. 9-வது வகுப்பு தமிழ்ப் பாட புத்தகத்தில் தமிழ் புத்தாண்டின் தொடர்கதை தொடரை நீக்கவும், 10-வது வகுப்பு தமிழ் பாடத்தில் 89-ம் பக்கத்தில் உள்ள கருணாநிதி எழுதிய கவிதை, 10-வது வகுப்பு தமிழ் புத்தகத்தில் 239-வது பக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு நடுவர் நிறுவனத்தின் பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகம், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருகிறது என்ற வாசகம் ஆகியவற்றை கருப்பு மை போட்டு அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
10-வது வகுப்பு தமிழ் புத்தகத்தில் 100-வது பக்கத்தில் “கலைஞரின் இனிய நடை படித்தறிக கொடிநாள்" என்ற பகுதி, 4-வது வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 111-வது பக்கத்தில் சென்னை சங்கமம் தொடர்பான தகவல்கள், 5-வது வகுப்பு சமூக அறிவியல் 80-வது பக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டிடம் படம் ஆகியவற்றை மறைக்க உ,த்தரவிடப்பட்டுள்ளது.
அதே புத்தகத்தில் 86-வது பக்கத்தில் கலைஞர் காப்பீடு திட்டம் என்ற தொடரை அழிக்க வேண்டும். மேலும், அதே புத்தகத்தில் 114-வது பக்கத்தில் புதிய தலைமை செயலகம்-2010 மார்ச் மாதம் 13-ந் தேதி முதல் ஓமந்தூரார் தோட்டத்தில் இயங்கி வருகிறது என்ற பகுதியை அழிக்க வேண்டும்.
10ம் வகுப்பு புத்தகத்தில் திமுக அரசின் சாதனைகள்!
10-வது வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 111-வது பக்கத்தில் தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்த பகுதியை நீக்க வேண்டும். அதே புத்தகத்தில் 112-வது பக்கத்தில் திராவிட முன்னேற்ற கழகம் என்ற சொல் நிரந்தர கருப்பு மையால் அழிக்கப்பட வேண்டும்.
அதே புத்தகத்தில் 277-வது பக்கத்தில் தமிழக அரசின் அவசர கால சேவை 108 என்ற பகுதியை மறைக்க வேண்டும். மேற்கண்டவை உள்ளிட்ட 41 பகுதிகள் சமச்சீர் பாட புத்தகத்தில் இருந்து நீக்கப்படுகிறது.
இத்தனை திருத்தங்களையும் செய்த பின்னர் மாணவ, மாணவியருக்கு புத்தகங்களை பள்ளிகள் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பாடங்களில்தான் இந்தக் குழப்பத்தை செய்து வைத்துள்ளது கடந்த திமுக அரசு. இவை இல்லாமல் இருந்திருந்தால் இந்த நேரம் பள்ளிகளில் புத்தகங்கள் வழங்கப்பட்டிருக்கும், வழக்குகள், குழப்பங்கள், தேவையில்லாத தாமதங்கள் ஆகியவை தவிர்க்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications