கொல்லப்பட்டதாக கூறப்பட்ட கடாபியின் 7வது மகன் காமிஸ் டிவியில் தோன்றினார்

Subscribe to Oneindia Tamil

பெங்காஸி: நேட்டோ படைத் தாக்குதலில் லிபிய அதிபர் கடாபியின் 7வது மகன் காமிஸ் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தன. ஆனால் அவர் இறக்கவில்லை என்று தற்போது கூறப்படுகிறது.

லிபியாவில் கடந்த 41 ஆண்டுகளாக சர்வாதிகாரியாக இருப்பவர் கடாபி. அவரைப் பதவி விலக வலியுறுத்தி ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை அடக்கும் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு ஐ.நா.சபையும், உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கடாபி பதவி விலகும்படி அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி நேட்டோ படை நடத்திய தாக்குதலில் கடாபியின் 7-வது மகன் காமிஸ் உள்பட 32 பேர் பலியாகினர் என்று போராளிகள் தெரிவித்தனர்.

இந்த தகவலை திரிபோலி அரசும் உறுதி செய்தது. இந்நிலையில் காமிஸ் உயிருடன் இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

நேற்று லிபிய தொலைக்காட்சியில் காமிஸ் உயிருடன் இருப்பதாக காண்பிக்கப்பட்டுள்ளது.

காமிஸ் கடாபி கடந்த செவ்வாய்க்கிழமை திரிபோலி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். நேட்டோ படைத் தாக்குதலில் காயம் அடைந்து அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அவர் இறந்துவிட்டதாக அறிவித்த பிறகு பொது இடத்திற்கு அவர் வந்துள்ளது இது தான் முதல் தடவை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+