ரூ.265.54 கோடி நஷ்டத்தை சந்தித்த மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்!
மும்பை: எரிப்பொருள் விலையேற்றம், குறைந்த பயணக் கட்டண வசூல் ஆகிய காரணங்களால், மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த 2வது காலாண்டில் 265.54 கோடி ரூபாய் அதிக நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
கடந்த ஏப்ரல்- ஜூன் இடையேயான 2வது காலாண்டில் பள்ளி, கல்லூரி விடுமுறைகளால், விமானப் போக்குவரத்து வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக இருந்தாலும் எரிப்பொருள் உயர்வு காரணமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடந்த காலாண்டில், 123.16 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. கடந்தாண்டில், இதே காலகட்டத்தில் ரூ 3.52 கோடி லாபத்தில் இயங்கி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதற்கடுத்த இடத்தில் உள்ள கிங்பிஷர் நிறுவனம், 263.54 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இதே நிறுவனம் கடந்தாண்டு 187.34 கோடி நஷ்டத்தைச் சந்தித்தது.
இரண்டாம் காலாண்டில் மட்டும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எரிப்பொருள் விலை 44.32 சதவீதம் உயர்ந்து, 845.13 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
இதுகுறித்து கிங்பிஷசர் நிறுவனம் வெளியிட்ட குறிப்பில், "நாட்டில் விமான போக்குவரத்தின் வளர்ச்சி 15 சதவீதத்தை அடைந்ததுள்ளது. ஆனால், இன்னும் 19 சதவீத வளர்ச்சித் தேவைப்படுகிறது.
கிங்பிஷர் நிறுவனம் உள்நாட்டு சரக்கு போக்குவரத்தை 4 சதவீத உயர்த்த முயன்று வருகிறது. ஆனால் அதே வேளையில் உள்நாட்டு சரக்கு போக்குவரத்தில் 2 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது, என்பதையும் கவனத்தில் கொண்டுள்ளது.
நிறுவனத்தின் பொருளாதார வீழ்ச்சியை தடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்று தெரிவித்துள்ளது.
மும்பை பங்கு சந்தையில், நேற்று கிங்பிஷசர் நிறுவனத்தின் பங்குகள் 2.57 சதவீதம் ஏற்றம் கண்டு, 31.90 ரூபாய்க்கு விற்பனையானது.
இதற்கிடையே, கிங்பிஷசர் நிறுவனத்தின் 23.21 சதவீத பங்குகளை, ஸ்டேட் பங்க், ஐ.சி.ஐ.சி.ஐ.,உள்ளிட்ட 13 வங்கிகள் வாங்கியுள்ளன. இதில் ஸ்டேட் பங்க் 5.67 சதவீதத்தையும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி 5.3 சதவீதத்தை யும் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications