சுங்கவரி கட்டண உயர்வை கண்டித்து தனியார் பஸ்கள் 5வது நாளாக ஸ்ட்ரைக்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சுங்கவரி கட்டண உயர்வை கண்டித்து 5 வது நாளாக தனியார் பஸ்களின் போராட்டம் தொடர்கிறது.
கிருஷ்ணகிரி டோல்கேட் வழியாக செல்லும் தனியார் பஸ்களுக்கு மாதத்திற்கு 5,515 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு முறை செல்ல 250 ரூபாய் செலுத்த வேண்டும் என டோல்கேட் நிர்வாகம் அறிவித்தது. பள்ளி, கல்லூரி பஸ்களுக்கும் டோல் கேட் கட்டணமும் உயர்த்தப்பட்டது.
இதனால் மாதத்திற்கு டோல்கேட்டில், பல ஆயிரம் ரூபாய் வரை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும் கடந்த 8ம் தேதி காலை முதல் கிருஷ்ணகிரி-ஒசூர் சாலையில் அனைத்து தனியார் பஸ்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளன.
இதன் அடையாளமாக, கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே தனியார் பஸ்களும், பள்ளி, கல்லூரி பஸ்களும் நிறுத்தப்பட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் 5 வது நாளாக தனியார் பேருந்துகள் போராட்டம் தொடர்கிறது. எனவே, இப்பிரச்சனையில் மத்திய மாநில அரசுகள் உடனே தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட பொது மக்கள் அரசுக்கு கோரி்க்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications