2ம் ஜார்ஜ் மன்னரின் மகன் வைத்திருந்த வீடு 140 மில்லியன் பவுண்டுகளுக்கு விற்பனை
Subscribe to Oneindia Tamil
லண்டன்: இங்கிலாந்தின் மிகவும் விலை உயர்ந்த வீட்டை ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் 140 மில்லியன் பவுண்டுகளுக்கு வாங்கியுள்ளார். இந்த வீடு ஒரு காலத்தில் 2ம் ஜார்ஜ் மன்னரின் மகனிடம் இருந்தது.
விலாடிமிர் லிசின் என்ற 54 வயது ரஷ்ய தொழிலதிபர்தான் இந்த வீட்டை வாங்கியுள்ளார். 300 ஆண்டு கால பழமை வாய்ந்த இந்த வீட்டை மைக்கேல் ஸ்பிங் என்ற டெவலப்பரிடமிருந்து லிசின் வாங்கியுள்ளார்.
ஆக்ஸ்போர்ட்ஷயரில் 200 ஏக்கர் பரப்பளவில் இந்த வீடு அமைந்துள்ளது. 2ம் ஜார்ஜ் மன்னரின் மூத்த மகனான வேல்ஸ் இளவரசர் பிரடெரிக் இதை ஒரு காலத்தில் வைத்திருந்தார். பின்னர் கிரீஸ் நாட்டு கப்பல் அதிபர் ஜான் லட்ஸிஸ் இதை வாங்கி வைத்திருந்தார்.
2 கோல்ப் மைதானங்கள், 10 காட்டேஜ்கள், எட்டு பழமையான காட்டேஜ்களுடன் கூடியதாக இந்த பிரமாண்ட வீடு உள்ளது.












Click it and Unblock the Notifications