இன்ஜினியரிங் கல்லூரி மாணவி தாயாருடன் தற்கொலை-மாணவரும் தற்கொலையால் பரபரப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், கல்லூரி மாணவி அவரது தாயுடனும், அதே கல்லூரியில் படித்த மாணவனும் திடீரென தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரி்த்து வருகின்றனர்.
காஞ்சிபுரம், பிள்ளையார் பாளையம் கச்சியப்பன் தெருவை சேர்ந்த சிவப்பிரகாசம் மகள் ஹேமபிரியா (21). அதே பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், ஹேமபிரியாவும், அவரது தாய் நாகபூஷனமும் (45) ஒரே அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, விசாரித்தனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் ரூம் எடுத்து வசித்து வந்த தேனி மாவட்டம், சுருளிப்பட்டியை சேர்ந்த ஜெகதீஷ் (22), அதே கல்லூரியில் மாணவரும் தற்கொலை செய்து கொண்டார்.
ஜெகதீஷ்-ஹேமபிரியா இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்கள் இருவரும், ஹேமப்பிரியாவின் தாயாரும் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் மூவரும் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications