For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பையில் தமிழர்கள் அதிக வாழும் தாராவியில் சென்ட் நிலத்திற்கு ரூ.1 கோடி விலை

Google Oneindia Tamil News

Dharavi
மும்பை: மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி குடிசைப் பகுதியில், 1 சென்ட் நிலத்திற்கு 1 கோடி ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

இந்தியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றான மும்பையில், மராட்டியர் அல்லாத மற்ற மாநிலத்தினர் அதிகம் வாழம் பகுதி தாராவி. இங்கு, தமிழகம்,பீகார், உத்தர பிரதேசம், அசாம் என உள்ளிட்ட மாநிலத்தினர் வசிக்கின்றனர். இதிலும் தமிழர்களின் எண்ணிக்கை தான் அதிகம்.

தாராவியில் இருந்து மும்பையின் மற்ற பகுதிகளுக்கு எளிதில் சென்றுவிடலாம். அதாவது, மும்பை விமான நிலையம் 12 கி.மீ.,தூரத்திலும், 4 ரயி்ல் நிலையங்கள் நடந்து செல்லும் தூரத்திலும் உள்ளது. இதனால், இங்கு அதிகளவிலான மக்கள் நெரிசலுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இங்குள்ள பெரும்பாலான வீடுகள், குடிசை அல்லது தகரத்தால் ஆனாது. வீடுகள் 100 முதல் 200 சதுர அடி அளவில் தான் இருக்கும். மும்பையின் நடுப்பகுதியில் உள்ள தாராவின் மொத்த பரப்பளவு 530 ஏக்கர். அதில், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

மிக குறுகிய அளவிலான வீடுகளில் மக்கள் நெருக்கத்துடன் வசித்தாலும், டிவி, பீரோ, மிக்ஸி, மொபைல்போன் என அனைத்து வசதிகளையும் பெற்றுள்ளனர். பெரும்பாலான வீடுகளில் கழிவறை இருப்பதில்லை. பொது கழிவறையை தான் மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

மும்பையிலேயே மிகவும் நெருக்கடியான தாராவியில் தற்போது நிலம் வாங்குவது குதிரை கொம்பாக மாறியுள்ளது. 1 சென்ட் நிலத்திற்கு 1 கோடி ரூபாய் என்று விற்கப்படுகிறது. சில உள்புறமான இடங்களில் மட்டும் சற்றுக் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. மேலும் 1 அறை மட்டுமே கொண்ட வீடுகளுக்கு 3 முதல் 6 ரூபாய் வரை செலவிட வேண்டியுள்ளது.

தாராவியின் இந்த விலையேற்றத்திற்கு பிறகும், இங்கு வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு குடிப்பெயர முயல்வதில்லை. இங்கு வசிக்கும் பலரும் தங்கள் பொருளாதார நிலைகளை உயர்த்தி உள்ள போதும், இங்கிருந்து இடமாறவில்லை.

இதை எல்லாவற்றையும் கடந்து, மொழி, இனம் மதம் ஆகிய பிரிவினைகள் இந்த பகுதியில் குறைந்தே காணப்படுகிறது. ஆனால், பணம் பார்க்க ஆசைப்படும் சிலரும் இல்லாமல் இல்லை. விலை அதிகம் தரும் பெரிய நிறுவனங்களுக்கு தங்கள் நிலங்களை விற்று விட்டு, செல்பவர்களையும் இங்கு காணலாம்.

English summary
In Mumbai's Dharavi land prices have hit the sky. A cent land is selling for Rs. 1crore here. This is the biggest slum in Asia and Tamils are majority in Dharavi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X