சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களுடன் இன்று தான் வகுப்புகள் தொடக்கம்!
சென்னை: தமிழகம் முழுவதும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டுவிட்டதையடுத்து இன்று முதல் பெரும்பாலான பள்ளிகளில் முறையான வகுப்புகள் தொடங்கவுள்ளன.
தமிழ்நாட்டில் மெட்ரிகுலேஷன், மாநில கல்வி வாரிய பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் மற்றும் ஓரியண்டல் பள்ளிகளில் தனித்தனியாக இருந்த பாடத்திட்டதை ஒரே பாடத்திட்டமாக மாற்ற கடந்த திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது.
முதல் கட்டமாக 1 மற்றும் 6 வகுப்புகளுக்கு எல்லா வகையான பள்ளிகளுக்கும் பொதுவாக சமச்சீர் கல்வி கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன.
இந் நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் சமச்சீர் பாடப்புத்தகங்கள் தரமாக இல்லை என்று கூறி அதை ரத்து செய்தது. இதையடுத்து சட்டப் போராட்டம் நடந்தது. இதனால் கடந்த 2 மாதமாக குழந்தைகள் புத்தகங்களே இல்லாமல் பள்ளிக்கூடங்களுக்கு சும்மா போய் வந்தனர்.
இந் நிலையில் உடனடியாக சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சமச்சீர் கல்வி உடனடியாக அமல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து குடோன்களில் வைக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை பள்ளிக்கூடங்களுக்கு வினியோகிக்கும் பணி கடந்த 9ம் தேதி தொடங்கியது. கடந்த1 வாரத்தில் மொத்தம் 5 கோடி புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.
இந்தப் புத்தகங்களோடு ஆசிரியர்களுக்கு ஒரு கையேடும் அனுப்பப்பட்டுள்ளது. அதில், பாடப்புத்தகங்களில் செம்மொழி மாநாடு பற்றிய செய்திகள், முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடர்பான வரிகள் உள்ளிட்ட பல பக்கங்கள் நீக்கப்பட வேண்டும் என்றும், சில பக்கங்கள் கறுப்பு மையால் அடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுரை கூறப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் பாடப்புத்தகத்தில் நீக்கவேண்டியதை நீக்கியும், ஸ்டிக்கர் கொண்டு ஒட்டி மறைக்கப்பட வேண்டியதை மறைத்தும் உள்ளனர். பெரும்பாலான பள்ளிகளில் இந்தப் பணி முடிந்துவிட்டது.
இதைத் தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. பெரும்பாலான பள்ளிகளில் இன்றுதான் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
இதைத்தொடர்ந்து இன்று முதல் அந்த புத்தகங்களை வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்த தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications