தேமுதிக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாஸ்கரன் உள்பட 4 நிர்வாகிகள் திடீர் நீக்கம்
சென்னை: 4 தேமுதிக நிர்வாகிகளை அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிப்பதாக கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான விஜயகாந்த் தனது கட்சி நிர்வாகிகள் 4 பேரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளார்.
நீக்கப்பட்ட நிர்வாகிகள் விவரம் வருமாறு,
கொள்கை பரப்பு துணை செயலாளர் சி.ஆர். பாஸ்கரன், கொள்கை பரப்பு துணை செயலாளர் புலவர் கதிரவன், தேர்தல் பணி செயலாளர் ஜெகவீரபாண்டியன், விவசாய தொழிலாளர் பிரிவு துணை செயலாளர் கோ.சங்கர்
இந்த 4 பேர் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.
இவர்களில் சி.ஆர்.பாஸ்கரன் டிவி அடிப்படையில் கட்சிகளில் செயல்பட்டு வருபவர் ஆவார். முன்பு தமிழன் டிவியில் செயல்பட்டார். பின்னர் மக்கள் டிவியில் பணியாற்றினார். கூடவே பாமகவிலும் மாவட்ட துணைத் தலைவர் பொறுப்பையும் வகித்து வந்தார். இந்த நிலையில் திடீரென அவர் பாமகவிலிருந்து விலகி தேமுதிகவில் இணைந்தார். தற்போது அவரை கட்சிப் பொறுப்புகளிலிருந்து தூக்கியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications