ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ: ஜப்பானின் வட கிழக்கில் 6.8 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
ஜப்பான் நேரப்படி 19ம் தேதி மாலை 2.36 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தென் கிழக்கில் உள்ள சுன்டாய் என்ற நகரில் இந்தநிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இந்தநகரம், மியாகி மாகாணத்தின் தலைநகராகும்.
கடலுக்குக் கீழ் 20 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் 11ம் தேதியன்று ஏற்பட்ட 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் காரணமாக 0.5 மீட்டர் உயரத்திலான அலைகள் கடற்கரைப் பகுதியைத் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது இந்த சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications