மும்பை பங்குச் சந்தையில் காலையிலேயே பெரும் சரிவு- நிப்டியும் சரிந்தது

உலக அளவிலான பலவீனமான பங்குச் சந்தை நிலவரமே இதற்குக் காரணம். உலகப் பொருளாதார நிலைமை குறித்த கவலைகள் பங்குச் சந்தையில் எதிரொலித்ததன் காரணமாக பங்குச் சந்தை வர்த்தகத்தில் சரிவு ஏற்பட்டது.
இன்று காலை மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியதுமே 351.75 புள்ளிகள் வரை சென்செக்ஸ் சரிந்தது. முற்பகல் வாக்கில் சென்செக்ஸ் 16,118.42 ஆக இருந்தது. அதேபோல நிப்டியும், 100 புள்ளிகள் வரை குறைந்து 4900 ஆக இருந்தது.
ஐடி, வங்கிகள் பிரிவில் பங்குகள் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டன. அதேபோல இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ், எச்டிஎப்சி நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியைக் கண்டன.
டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் ஆகியவற்றின் பங்குகளும் கணிசமாக சரிந்தன. ஆசிய பங்குச் சந்தைகளில் 4 சதவீத அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளதாக புரோக்கர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க பங்குச் சந்தையும், பொருளாதார நி்லையும் பலவீனமாகஇருப்பதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications