அன்னாவின் போராட்டம் பலன் தராது, நியாயமற்றது-நந்தன் நிலகேனி

இதுகுறித்து அவர் சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஊழலை ஒழிக்க தற்போது அன்னா ஹஸாரே தலைமையில் நடந்து வரும் போராட்டம் வெற்றி பெறும் என்று நான் நினைக்கவில்லை. இந்தப் போராட்டத்தால் ஊழலை ஒழிக்க முடியாது. லோக்பால் மசோதாவால் ஊழலை ஒழிக்க முடியாது. ஊழலுக்கு எதிரான பல்வேறு ஆயுதங்களில் ஒன்றாக அது இருக்க முடியுமே தவிர அதனால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் என்று வாதிடுவது அர்த்தமற்றது.
படிப்படியாக திட்டமிட்டு எடுக்கப்படும் நடவடிக்கைகள் மூலமாக மட்டுமே ஊழலை ஒழிக்க முடியுமே தவிர இப்படிப்பட்ட போராட்டங்கள் மூலம் ஒழிக்க முடியும் என நான் நினைக்கவில்லை.
ஊழலை ஒரே அடியாக அடித்து வீழ்த்தும் தோட்டவாக நான் லோக்பால் மசோதாவைப் பார்க்கவில்லை. அப்படிப் பார்க்கவும் முடியாது. சட்டம் போட்டு ஊழலை ஒழிக்க முடியும் என்று கூறுவது சரியல்ல.
அரசு கொண்டு வந்துள்ள லோக்பால் மசோதாவும் சரி, அன்னா ஹஸாரே குழுவினர் கூறும் ஜன் லோக்பால் மசோதாவும் சரி, ஊழலை ஒழிக்கும் ஒரே ஆயுதம் அல்ல. இந்த சட்டம் வந்தால் ஊழல் ஒழிந்து விடும் என்று நினைப்பது கற்பனைக்கு சரி வருமே தவிர நிஜத்தில் சாத்தியமில்லாதது.
சமூக அளவில் முதலில் ஊழலை ஒழிக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான மக்களின் வேதனைகள், விரக்திகள், கோபங்களை நான் அங்கீகரிக்கிறேன், மதிக்கிறேன். அதேசமயம், புற்றுநோயாக மாறியுள்ள ஊழலை ஒழிக்க ஒரு சட்டம் போதுமானது என்று கருதுவது தவறானது. ஊழிலை ஒழிக்க மிகப் பெரிய அளவிலான நடவடிக்கைகள் நமக்குத் தேவைப்படுகிறது. பல நடவடிக்ககளை நாம் எடுக்க வேண்டியுளள்ளது. அதில் ஒரு நடவடிக்கையாக மட்டுமே லோக்பால் இருக்க முடியும்.
லோக்பால் மசோதா தேவையில்லை என்று நான் சொல்ல வரவில்லை. அதுவும் தேவை. அதேசமயம், அது மட்டும் போதாது, அதனால் மட்டும் ஊழலை ஒழித்து விட முடியாது என்பதுதான் எனது குறித்து. ஒட்டுமொத்த பிரச்சினைகளையும் கருத்தில் கொள்ளாமல் நாம் சட்டம் தேவை என்று கூறுவது அர்த்தமற்றது.
பொது சேவைகளில் நிலவும் முறைகேடுகள், ஊழல்களை நாம் களைய வேண்டும். படிப்படியாக ஒவ்வொரு மட்டத்திலும் உள்ள ஊழலை ஒழிக்க வேண்டும். அப்போதுதான் முழுமையாக ஊழலை ஒழிக்க முடியும். அதற்கு சட்டம் மட்டும் போதாது.
ரேஷன் கடைகளுக்குப் போனால் அங்கு ஊழல். பென்ஷன் பணத்தை வாங்க லஞ்சம். ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு இடம் மாறிப் போகும்போது வங்கிக் கணக்கை மாற்றவோ, கேஸ் இணைப்பை மாற்றவோ முயலும்போது அங்கும் லஞ்சம். மின் இணைப்பு பெற லஞ்சம், வேலையில் சேர லஞ்சம். இப்படி பல மட்டங்களில், அடி மட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இவற்றையெல்லாம் ஒழிக்க வேண்டும்.
எனவே ஒரே ஒரு சட்டம் எல்லா ஊழலையும், லஞ்சத்தையும் ஒழித்து விடும் என்ற நம்பிக்கை தவறானது, அர்த்தமற்றது என்றார் நிலகேனி.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications