பாண்டியன், சேரன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 7 ரயில்களில் சி.பி.ஐ ரெய்ட்!

எம்ர்ஜென்சி கோட்டா, ரயில் பெட்டிகள் பராமரிப்பு, முதல் வகுப்பு ரயில் பெட்டிகளில் படுக்கை விரிப்புகள் பராமரிப்பு உள்ளிட்ட விஷயங்களில் பெரும் முறைகேடுகள் நடப்பததாக வந்த புகார்களையடுத்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
பாண்டியன் எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ், ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், பெங்களூர் மெயில், திருவனந்தபுரம் மெயில் மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த சேதனையை நடத்தினர்.
ரயில் பெட்டிகளை சுத்தப்படுத்துவது, படுக்கை விரிப்புகளை துவைப்பது ஆகியவற்றின் காண்ட்ராக்டர்களில் பெரும் முறைகேடுகள் நடந்து வருவதாகவும், ரயில் பெட்டிகளை சுத்தப்படுத்தாமலேயே அதற்கான கட்டணம் காண்ட்ராக்டர்களுக்கு வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதில் ரயில்வே அதிகாரிகள்-காண்ட்ராக்டர்கள் கூட்டுக் கொள்ளை குறித்து அறிய சிபிஐ இந்த அதிரடி சோதனையை நடத்தியுள்ளது.
அதே போல எமர்ஜென்சி கோட்டா டிக்கெட்களை ரயில்வே அதிகாரிகள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் ஒதுக்குவதாகவும் புகார்கள் உள்ளன, இது குறித்து அறிய இந்த ரயில்களில் எமர்ஜென்சி கோட்டாவில் பயணித்த பயணிகளிடமும் சிபிஐ அதிகாரிகள் ஓடும் ரயிலில் வைத்தே விசாரணை நடத்தினர்.
கிட்டத்தட்ட 100 அதிகாரிகள் இந்த 7 ரயில்களிலும் அவை ஓடிக் கொண்டிருந்தபோதே சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சோதனைகளையடுத்து மூத்த ரயில்வே அதிகாரிகள் பலர் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்யலாம் என்று தெரிகிறது.
-
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
கோயம்பேட்டில் மூட்டை மூட்டையாக தேங்கி கிடக்கும் காய்கறிகள்.. வியாபாரிகள் கனவிலும் நினைக்காத மாற்றம் -
அதிமுக கோட்டையில் 'தென்னந்தோப்பு'! சசிகலாவின் மாஸ்டர் பிளான்! இரட்டை இலைக்கு செக் வைக்கும் 'பச்சை'! -
பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு! -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications