தமிழக பள்ளிகளில் மதிய உணவைப் போல விரைவில் காலை உணவுத் திட்டம் அறிமுகம்

தமிழகத்தில் காமராஜர் முதல்வராக இருந்தபோது மதிய உணவுத் திட்டத்தை நாட்டிலேயே முதல் முறையாக அமல்படுத்தி லட்சக்கணக்கான ஏழை பெற்றோர்களின் மனதில் பால் வார்த்தார். இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து தமிழக பள்ளிக்கூடங்களுக்கு வரும் ஏழை மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து கல்வியில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டது.
பின்னர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், இந்தத் திட்டத்தை சத்துணவுத் திட்டமாக மாற்றி, சத்தான உணவை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்தார். இந்தத் திட்டமும் பெரும் புரட்சி படைத்தது. இத்திட்டத்தை பல மாநிலங்களும் இன்று கடைப்பிடிக்கின்றன.
இந்தநிலையில் தற்போது இன்னொரு புதிய புரட்சிக்கு முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டு வருகிறார். அது காலை உணவுத் திட்டம்.
தற்போத நாட்டிலேயே புதுச்சேரி மாநிலத்தில் மட்டுமே காலை உணவுத் திட்டம் அமலில் உள்ளது. ராஜீவ் காந்தி காலை உணவுத் திட்டம் என்று இதற்குப் பெயர். தற்போது இந்த வரிசையில் தமிழகமும் விரைவில் சேரவுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி மாணவ, மாணவியருக்கு காலை உணவாக பால், பன், உப்புமா உள்ளிட்டவை தரப்படும் என்று தெரிகிறது. இத்திட்டம் குறித்து தமிழக அரசு தீவிரமாக யோசித்து வருகிறது. திட்ட வரைவு இறுதியானவுடன் இதுகுறித்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என்று தெரிகிறது.
இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், மதிய உணவு மற்றும் சத்துணவுத் திட்டத்திற்கு தமிழகம்தான் நாட்டுக்கே முன்னோடியாகும். இந்தத் திட்டங்களால் தமிழகத்தின் கல்வி வளர்ச்சியில் மிகப் பெரிய புரட்சி ஏற்பட்டது. இப்போது அதே பாணியில் காலை உணவுத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்றார்.
தமிழகத்தில் 1985ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தை 1995ம் ஆண்டு மத்திய அரசு ஏற்று நாடு முழுவதுக்கும் விரிவுபடுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2001ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் இந்தத் திட்டத்தைப் பாராட்டி அனைத்து மாநிலங்களும் சத்துணவை வழங்க வேண்டும் என்று உத்தரவே பிறப்பித்தது என்பது நினைவிருக்கலாம்.
இந்த வரிசையில் காலை உணவுத் திட்டம் தமிழகத்தில் அமலாகும்போது அது மேலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications