தமிழக மீனவர்களை நான் அனுப்பிய ஆட்கள் தாக்கவில்லை-டக்ளஸ் தேவானந்தா பேச்சு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: நாகை மாவட்ட மீ்னவர்களை நடுக் கடலில் மறித்து கத்தியால் குத்தி வெறித்தனமாக தாக்கப்பட்ட சம்பவத்தில் தனக்குத் தொடர்பில்லை என்று இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான இலங்கையைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
டக்ளஸ் அனுப்பிய கூலிப்படையினர்தான் நாகை மாவட்ட மீனவர்களை நடுக்கடலில் மறித்துத் தாக்கினர், கத்தியால் குத்தினர், மீன்களை கடலில் தூக்கிப் போட்டனர் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.
இதை இப்போது டக்ளஸ் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த கருத்துக்களில் உண்மை இல்லை. இந்தப் புகார்களுக்கும் எனக்கும் தொடர்பில்லை. இந்த சம்பவத்தில் எனக்குத் தொடர்பில்லை. இந்தப் புகாரை முழுமையாக மறுக்கிறேன் என்று டக்ளஸ் கூறியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications