மீண்டும் திமுக ஆட்சி மலரும்: மத்திய அமைச்சர் நெப்போலியன் நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி மலரும் என்று மத்திய அமைச்சர் நெப்போலியன் தெரிவித்துள்ளார்.

புனித ரமலான் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் மத நல்லிணக்க விழா நெல்லை கொக்கிரகுளத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமை தாங்கினார்.

ராமசுப்பு எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ், மாநகர் மாவட்ட் காங்கிரஸ தலைவர் சுந்தரராஜ பெருமாள், மேயர் ஏஎல் சுப்பிரமணியன், தங்கவேலு எம்.பி., மாநகர திமுக செயலாளர் மாலை ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியை முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நெப்போலியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது,

உலகம் முழுவதும் உள்ள மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் இஸ்லாமிய சமுதாயத்தினர் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். எந்த அலையிலும் திமுக என்ற படகு கவிழ்ந்து விடாது. கண்டிப்பாக கரை சேரும். மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும். அதிமுக ஆட்சியில் சட்டசபையில் எதிர்கட்சியினரை பேச அனுமதிப்பதில்லை. அந்த அளவுக்கு அராஜகம நடக்கிறது. திமுகவினர் துவண்டு விடாமல் உழைக்க வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+