பேஸ்புக் மூலம் திரண்டு துபாயில் ஹசாரேவுக்கு ஆதரவாக இந்தியர்கள் ஊர்வலம்- ஒருவர் கைது
துபாய்: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக துபாயில் 150க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஊர்வலம் சென்றனர். அனுமதியின்றி இந்த ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்த இந்தியர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
அல் மம்சார் கடற்கரையில் இருந்து 3 கி.மீ. தூரத்துக்கு இவர்கள் ஊர்வலம் செல்ல இருந்தனர். ஆனால் பாதி வழியிலேயே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டனர்.
பின்னர் அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக, ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்த இந்தியர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து ஐக்கிய அரபு எமிரேட்டுகளுக்கான இந்திய துணைத்தூதர் சஞ்சய் வர்மா கூறுகையில், இந்தியர் கைதானது பற்றி எங்களுக்கு தெரியும். அவருக்கு தூதரகம் உதவி செய்யும். இந்தியர்கள், உள்ளூர் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்றார்.
பேஸ்புக் மூலமாக இந்த 150 பேரும் ஒன்று திரண்டு ஊர்வலம் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications