'ஆட்டோ' சங்கருக்குப் பிறகு, 17 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தமிழகத்தில் தூக்குத் தண்டனை

பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோர் செப்டம்பர் 9ம் தேதி தூக்கிலிடப்படுவர் என்று வேலூர் சிறை நிர்வாகம் தெரிவித்து விட்டது. இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பும், பதட்டமும் பற்றிக் கொண்டுள்ளது. இதை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை கடைசியாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது 1995ம் ஆண்டுதான். அந்த ஆண்டு, ஏப்ரல் 27ம் தேதி ஆட்டோ சங்கர் சேலம் சிறையில் தூக்கிலிடப்பட்டார். தொடர் கொலைகளில் ஈடுபட்டு கைதான சங்கருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சேலம் சிறையில் வைத்து தூக்கிலிடப்பட்டார்.
இந்தியாவைப் பொறுத்தவரை கடைசியாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது 2004ம் ஆண்டு கொல்கத்தாவில். அந்த ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி அலிப்பூர் மத்திய சிறையில் தனஞ்செய் சாட்டர்ஜி என்பவர் தூக்கிலிடப்பட்டார். 14 வயது சிறுமியை மிகக் கொடூரமாக கற்பழித்துக் கொலை செய்ததற்காக அவருக்கு இந்தத் தண்டன நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்திற்கு மீண்டும் தூக்குத் தண்டனை திரும்பி வந்துள்ளது. தூக்கில் போடும் தேதியை சிறை நிர்வாகம் முடிவு செய்து விட்டதைத் தொடர்நது தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளும் அமைதியான முறையில் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
தூக்குமரத்தை தயார் செய்வது, தூக்கில் போடுவதற்கான நபரை தேடுவது, கயிறு உள்ளிட்டவற்றை வாங்குவது உள்ளிட்ட பணிகள் தொடங்கியிருப்பதாக தெரிகிறது. தூக்கு மரத்தை எண்ணெய் போட்டு தயார் செய்யும் பணியும் நடந்து வருகிறதாம்.
வேலூர் சிறையைப் பொறுத்தவரை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் எப்போதோ தயார் நிலையில் வைக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
வேலூர் சிறையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் சிலர் ஏற்கனவே அடைக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரான முனியப்பன், நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன் ஆகியோர் இங்குதான் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
17 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் தூக்குத் தண்டனை, அதுவும் ஒரே நேரத்தில் 3 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications