சேலத்தில் போலீசாரை மிரட்டிய தே.மு.தி.க. பிரமுகர் கைது
சேலம்: சேலத்தில் காவல் நிலையத்தில் புகுந்து போலீசாரை மிரட்டிய தே.மு.தி.க. கிச்சிப்பாளையம் அவைத் தலைவர் புல்லட் மனோகரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் அருகே ரெட்டியூர் பகுதியில் கேபிள் கட்டணம் தொடர்பாக இருதரப்புக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் எஸ்.ஐ ராஜதுரை என்பவர் மணிவேல், மூர்த்தி ஆகிய இருவரை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினர்.
இதையறிந்த தே.மு.தி.க., சேலம் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் தே.மு.தி.க., கிச்சிப்பாளையம் அவைத் தலைவர் புல்லட் மனோகர் ஆகியோர் தலைமையிலான 30 பேர், காவல் நிலையத்துக்குள் புகுந்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்து, தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் சேலம் போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தே.மு.தி.க., கிச்சிப்பாளையம் அவைத் தலைவர் புல்லட் மனோகரை போலீசார் கைது செய்தனர். மேலும், காவல் நிலையத்தில் அத்துமீறி நுழைந்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த தே.மு.தி.க.,வைச் சேர்ந்த 30 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சேலத்தில் காவல் நிலையத்தில் புகுந்து போலீசாரை தே.மு.தி.கவினர் மிரட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications