சத்துணவு முட்டைகளில் இன்று முதல் மீண்டும் வண்ணக் குறியீடு

தமிழகம் முழுவதும் சத்துணவுத் துறை மூலமாக பள்ளி மாணவர்களுக்கு முட்டைகள் வழங்கப்படுகின்றன. வாரத்தில் ஒரு நாளாகத் தொடங்கப்பட்ட இத்திட்டம் பிறகு 3 நாளாகவும், அதைத் தொடர்ந்து 5 நாள்களாகவும் அதிகரிக்கப்பட்டது. தற்போது திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் முட்டை வழங்கப்படுகிறது.
சில இடங்களில் சத்துணவுத் திட்ட முட்டைகள், வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும் கெட்டுப் போன பழைய முட்டைகள் கலந்துவிடுவதால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
இத்தகைய பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காக சத்துணவுத் திட்ட முட்டைகளின் மேல் ஓட்டில் முன்பு வண்ணக் குறியீடு இடப்பட்டது. பின்னர் அந்த நடைமுறை படிப்படியாக கைவிடப்பட்டது.
இந்நிலையில், தற்போது முட்டைகளின் மேல் ஓட்டில் வண்ணக் குறியீட்டை கண்டிப்பாக இட வேண்டும் என்று, சத்துணவுத் துறை அதிகாரிகள், ஊராட்சி ஒன்றியங்களின் ஆணையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இதன்படி திங்கள் - பச்சை, செவ்வாய் - நீலம், புதன் - சிவப்பு, வியாழன் - கறுப்பு, வெள்ளி - மஞ்சள் வண்ணங்களில் பெருக்கல் குறி இட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications