ரூ 50 லட்சம் கணக்கில் வராத பணம்: வருமான வரித்துறை கூடுதல் இயக்குநர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: கணக்கில் வராத பணம் ரூ 50 லட்சம் வைத்திருந்ததாக சென்னையில் வருமான வரித் துறை கூடுதல் இயக்குநர் ரவீந்திரா இன்று கைது செய்யப்பட்டார்.
சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் அவரைக் கைது செய்தனர்.
ரவீந்திரா ஏராளமான புகார்கள் தொடர்ந்து வந்ததால், அவர் வீ்ட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ 50 லட்சம் பணத்தை சிபிஐ போலீசார் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
அவரது வீட்டில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications