மாநில அரசு நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடக்கூடாது: குஜராத் பாஜக எம்பி
டெல்லி: மாநில அரசின் நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடக்கூடாது என்று குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்பி கிரித் சோலங்கி தெரிவித்தார்.
மக்களவையில் மாநில அரசின் நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவது குறித்து குஜராத் பாஜக எம்பி கிரித் சோலங்கி பேசியதாவது,
அன்மையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சில போலீஸ் உயர் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார். அதில் மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டு அந்த அதிகாரிகளுக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்தது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த செயல் முறையன்று. இது மாநில அரசின் நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவதாகும். இதை ஒருபோதும் ஏற்க முடியாது.
இந்த செயல் கூட்டாட்சித் தத்துவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே, நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார்.
அவருக்கு சில காங்கிரஸ் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து கூச்சலிட்டனர்.












Click it and Unblock the Notifications