பள்ளிக்கு தாமதமாக பணிக்கு வந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் கட்: மாவட்ட நிர்வாகம் அதிரடி
திருவண்ணாமலை: பள்ளிக்கு தாமதமாக பணிக்கு வந்த ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளுக்கு பணியாற்றும் ஆசிரியர்கள் நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை என பரவலான புகார்கள் எழுந்தது.
இதையடுத்து, உரிய நேரத்தில் பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை தர வேண்டும் என மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டார். ஆனாலும் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் மிகவும் காலதாமதமாக வந்தனர். இந்நிலையில், ஆரணி தாலுகா கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று காலை 9 மணிக்கு முதன்மை கல்வி அலுவலர் சுகன்யா திடீர் ஆய்வு நடத்தினார்.
பள்ளி தொடங்கி பின், 15 நிமிடங்கள் தாமதமாக 9 ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தனர். அவர்களை வருகை பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்க கூடாது என தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணனுக்கு சுகன்யா உத்தரவிட்டார்.
மேலும், தாமதமாக பணிக்கு வந்த 9 ஆசிரியர்களுக்கு ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டார். முதன்மை கல்வி அதிகாரியின் அதிரடி நடவடிக்கை மாவட்டம் எங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications