அரசு விழாவில் ரகளை வழக்கு- அமைச்சர் கருப்பசாமி உள்பட 16 பேர் விடுதலை

Subscribe to Oneindia Tamil

நெல்லை: அரசு விழாவில் ரகளை செய்த வழக்கில் அமைச்சர் கருப்பசாமி உள்பட 16 பேரை நெல்லை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் கடந்த 22-2-2009ல் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதற்கான அழைப்பிதழிலும், விளம்பரங்களிலும் தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் அமைச்சர் கருப்பசாமியின் பெயர் இடம் பெற்றிருந்தது.

ஆனால் கருப்பசாமியின் அனுமதியின்றி பெயரை போட்டதாக ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த நாற்காலிகள் மற்றும் பந்தல்களை அடித்து நொறுக்கியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் அமைச்சர் கருப்பசாமி, வைரவன், நம்பிராஜன், சரவணன் உள்பட 16 பேர் சேர்க்கப்பட்டனர்.

இந்த வழக்கு நெல்லை 2-வது நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கமலாவதி அமைச்சர் உள்பட 16 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+