ஸ்பெக்ட்ரம் ஊழல்: தயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை என சிபிஐ தகவல்

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தயாநிதி மாறனுக்கு எதிரான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
அதே சமயம், எஸ்ஸார் நிறுவனத்திற்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாக அது தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது தொலைத் தொடர்புயைக் கவனித்தவரான அருண் ஷோரி மற்றும் அப்போதைய நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோரிடம் விசாரணை நடத்தவிரும்புவதாக அது தெரிவித்துள்ளது.
ஏர் செல் நிறுவன முன்னாள் தலைவர் சிவசங்கரனை மிரட்டி மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திடம் ஏர்செல்லை விற்குமாறு தயாநிதி மாறன் மிரட்டினார். அதைத் தொடர்ந்து மேக்சிஸ் நிறுவனம் வசம் ஏர்செல் வந்த பின்னர் அதி வேகமாக அந்த நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் லைசன்ஸை தயாநிதி மாறன் ஒதுக்கினார் என்பது குற்றச்சாட்டு. இதன் பேரில்தான் தயாநிதி மாறன் பதவி விலகினார்.
இதற்கு ஆதாரம் இருப்பதாகவும் முன்பு சிபிஐ கூறியிருந்தது. ஆனால் தற்போது இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிபிஐ ஆதாரம் இருப்பதாக கூறியதைத் தொடர்ந்துதான் தயாநிதி மாறனை கட்டாயப்படுத்தி பதவி விலகச் செய்தது காங்கிரஸ் கட்சி என்பது நினைவிருக்கலாம்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் இதுவரை 2 குற்றச்சாட்டுக்களைத் தாக்கல் செய்துள்ளது சிபிஐ. இந்த வழக்கில் இதுவரை முன்னாள் அமைச்சர் ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய 9 நிறுவனங்களில் தற்போது எஸ்ஸார் குழுமம் மீது தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் சிபிஐ கூறியுள்ளது. அந்த நிறுவனத்திற்கு எதிரான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் அது கூறியுள்ளது.
எஸ்ஸார் குழுமத்தின் சார்பில் உருவாக்கப்பட்ட லூப் நிறுவனம்தான் 2008ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications