தூத்துக்குடி அருகே 15 வயது மகளுக்கு திருமணம் நடத்திய தாய் தந்தை கைது
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே குழந்தை திருமணத்தை நடத்திய தாய்- தந்தை இருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கீழஈரால் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கடற்கரை மகன் முத்துவீரன் (24). இவருக்கும் அதே தெருவை சேர்ந்த அழகர்சாமி (39) மகள் காளீஸ்வரிக்கும் கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது காளீஸ்வரிக்கு 15 வயது மட்டுமே நிறைவடைந்திருந்ததாக கூறப்படுகின்றது. இது குறித்து தகவல் அறிந்த கீழஈரால் கிராம நிர்வாக அதிகாரி புகாரின் பேரில் எட்டயபுரம் போலீசார் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தனர்.
இந்த வழக்கில் காளீஸ்வரியின் தந்தை அழகர்சாமி, தாயார் குருவம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்தார்.












Click it and Unblock the Notifications